காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ்  தேசிய செயலாளர் சஞ்சய் தத், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வசந்தகுமாரின் ஆதரவாளர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டதாக மீனவர் அணி நிர்வாகி சபீன் குற்றம்சாட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமாரின் ஆதரவாளர்கள், சபீனை கடுமையாக தாக்கினர். நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதால் ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சபீன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version