ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையம் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சோதனை நடத்த நகராட்சி மண்டல இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து கோபி செட்டிப் பாளையம் நகர் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட ஒரு கடையில் சுமார் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதமும் விதித்தனர்.

Exit mobile version