துணை ஆணையர் தலைமையில் மாணவர்கள் உறுதி மொழி

கத்தியுடன் வலம் வந்த கல்லூரி மாணவர்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், இனி எந்த குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர். சென்னை அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் ரூட்டு தல பிரச்சனைகளில் ஈடுபடக்கூடிய பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிகளை மாணவர்களை அழைத்து உறுதிமொழி ஏற்க வைத்தனர். இனி எந்தக் குற்றச் சம்பவங்களில் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்றும், அப்படி ஈடுபட்டால் காவல்துறை எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுவோம் என்றும் அந்த உறுதி மொழியில் தெரிவித்தனர்.

கடந்த 23ஆம் தேதி ரூட்டு தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 6 மாணவர்களை கைது செய்துள்ள காவல்துறையினர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.

Exit mobile version