சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இரங்கல்

இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முற்பகல் கூடிய நாடாளுமன்றத்தில், சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, தனது இரங்கலை வெளியிட்டார். இரங்கலின் போது, வெளியுறவு அமைச்சராக சுஷ்மா சுவராஜ் ஆற்றிய பணியை கௌரவிப்பதோடு, அவரது மறைவிற்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Exit mobile version