இந்து கடவுள் குறித்த கி.வீரமணியின் பேச்சுக்கு கண்டனம்

இந்து கடவுள் குறித்த கி.வீரமணியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, இந்துக்கள் பாதுகாப்பு படையினரின் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது.

திராவிட கழக தலைவர் கி.வீரமணி அண்மையில், இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில், சென்னை மயிலாப்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் எஸ்.கே.சாமி, வீரமணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு வாக்களிக்க கூடாது எனவும், கி.வீரமணி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version