ஸ்டாலின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் புகார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமான வரி துறை சோதனை நடத்தியது தொடர்பாக மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருவது, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் மீதும் எதிர்மறையான எண்ணத்தை தோற்றுவிப்பதாகவும் எனவே, தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் அவர் கூறியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து, அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் ஸ்டாலின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version