குரூப் 4 முறைகேடு வழக்கில் தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு

குரூப் 4 முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் இடைத்தரகர் ஜெயக்குமாரின் புகைப்படத்தை சென்னை மாநகரம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் சுவரொட்டியாக ஒட்டியுள்ளனர்.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரின் முகப்பேர் இல்லத்தில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இடைத்தரகர் ஜெயக்குமார் ஆந்திராவில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். இந்நிலையில், இடைத்தரகர் ஜெயக்குமாரின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டியை சென்னை மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள சிபிசிஐடி போலீசார், அவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுமென்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.

Exit mobile version