ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மு.க. ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், செவ்வாய்கிழமை மாலை 6 மணி முதல் அரசியல் கட்சி தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊடகங்களுக்கு இரண்டு முறை பேட்டி அளித்தார். இதனையடுத்து அதிமுக சார்பில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாபு முருகவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். மேலும், வாக்காளர்களை திசை திருப்பும் வகையில் அதிமுக மீது ஸ்டாலின் அவதூறு பரப்பி வருவதாகவும் பாபு முருகவேல் குற்றச்சாட்டினார்.

Exit mobile version