சத்தியமங்கலம் பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே தாளவாடி பகுதியில், திமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் பாலப்படுகை கிராமம் உள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில், கிராம மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப்பை, திமுக நிர்வாகிகளிடம் காண்பித்து, ஒரு ஓட்டுக்கு 250 ரூபாய் வீதம் பெற்றதாக தெரிகிறது. திமுகவினர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, கிராம மக்களிடம் இருந்து பூத் சிலிப்பை பெற்று வரும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version