தமிழக அமைச்சர்களை மிரட்டிய விவகாரத்தில் ஆ.ராசா மீது புகார்

தமிழக அமைச்சர்களை மிரட்டும் தொனியில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது பெம்பலூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அதிமுக அமைச்சர்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பெரியசாமி, ஆ.ராசா மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version