சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம்!

சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் பல்வேறு நலத்திட்ட பயன், அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த, சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க, தனி ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நீதியரசர் குலசேகரன் ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதோடு விரைவில் அதன் பணியையும் துவக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதிமுக அரசு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version