கன்னியாகுமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சிகள் அரசு மீது அவதூறுகளை பரப்ப ஆரம்பித்துவிட்டதாக சாடினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்கப்பட மாட்டாது என முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

Exit mobile version