சாதனை படைத்த கோமதிமாரிமுத்துவுக்கு பாராட்டு விழா

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு தமிழ்நாடு வணிகர் சங்களின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த திருச்சியை சேர்ந்த கோமதிமாரிமுத்துவுக்கு அவரது சாதனையை பாராட்டி தமிழக அரசும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் பரிசுத் தொகை வழங்கி உள்ளன. இந்தநிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோமதி மாரிமுத்துவின் சாதனையை பாராட்டி அவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து, ஊக்க மருந்து புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறினார்.

Exit mobile version