காவிரி ஒழுங்காற்று குழுவின் 20வது ஆலோசனை கூட்டம் தொடக்கம்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20வது ஆலோசனை கூட்டம் துவங்கியது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20வது ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் துவங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் 4 மாநிலத்தின் பிரதிநிதிகளும் காவிரி நீர் தொடர்பான தங்களது புள்ளி விவரங்களை எழுத்து பூர்வமாக சமர்பிக்கவுள்ளனர்.

Exit mobile version