படுக்கைக்கு வா… இல்ல ரூ.10 லட்சம் தா… நிர்வாண படங்களை வைத்து மிரட்டும் டெலிபோன் மன்மதன்…

பரமக்குடி அருகே பெண்ணின் நிர்வாண படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி அவரிடம் 10 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி அருகே வசித்து வருபவர் பாதிக்கப்பட்ட பெண். 30 வயதாகும் இவருக்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். இந்த நிலையில், இவருக்கு சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்த உறவினரான ராஜ்குமார் என்பவருடன் போன் உரையாடல் மூலமாக தொடர்பு ஏற்பட்டுள்ளது.

தொடக்கத்தில் நலன் விசாரிப்போடு அழைப்புகள் நிறைவடைந்தாலும் நாட்கள் நகர நகர உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் இரட்டை அர்த்த பேச்சுகள் எல்லை மீற தொடங்கின. இந்த நிலையில், கணவரை பிரிந்து தன்னுடன் வந்து விடுமாறு அந்த பெண்ணை கட்டாயப்படுத்த தொடங்கியுள்ளார் ராஜ்குமார்.

டைம்பாஸுக்கு பேச்சு வளர்த்த அந்த பெண், ராஜ்குமாரின் மிரட்டலுக்கு பிறகு அவரை தவிர்த்துள்ளார். இந்த நிலையில் வேறொரு எண்ணில் இருந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ராஜ்குமார், அவரின் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு நச்சரித்துள்ளார். மறுக்கும் பட்சத்தில் நீ பேசிய ஆடியோவை இணையத்தில் லீக் செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆடிப்போன அந்த அந்தபெண், வேறுவழியின்றி அவரின் நிர்வாண படங்களை ராஜ்குமாருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் பிரச்னை இதோடு நிற்கவில்லை. அடுத்ததாக அந்த பெண்ணை படுக்கையில் உல்லாசமாக இருக்க அழைப்பு விடுபுள்ளார். ராஜ்குமார் மறுத்தால் 10 லட்சம் ரூபாய் தருமாறும் மிரட்டியுள்ளார் அந்த டெலிபோன் மன்மதன்.

அதிர்ச்சி அடைந்த அவர், தனது இக்கட்டான சூழ்நிலையை கூறி, உறவினர் ஒருவரின் உதவியை நாட, வெற்றிகரமாக டெலிபோன் மன்மதன் மீது பரமக்குடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர்

விசாரணையில் இந்த அருவருப்பான செயலுக்கு அவரது சகோதரர் சிவாவும், அவரது மனைவி ஆனந்தியும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். தலைமறைவான ராஜ்குமாரின் மனைவியை தேடி வருகின்றனர். இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்து பணபறிப்பில் ஈடுபட மனைவியே துணையாக இருந்த சம்பவம் அப்பகுதி வாசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

Exit mobile version