புதுச்சேரியில் கல்லூரிகள் திறப்பு!

புதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு அனைத்து கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி இறுதியாண்டு மாணவர்களுக்காக மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளுக்கு சென்றனற். முகக் கவசத்துடன் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 50 சதவீத மாணவர்களை மட்டுமே வகுப்பறையில் அனுமதிக்கவும், மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒரு நாள் விட்டு, ஒருநாள் சுழற்சி முறையில் கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version