கத்தி மற்றும் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாள்களுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இன்று காலை 7:30 மணியளவில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களும், கொருக்குப்பேட்டை தியாகராயர் கல்லூரி மாணவர்களும் பட்டா கத்திகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் மோதிக்கொண்டதால் அலறியடித்து ஓடிய பயணிகள், இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

 மாணவர்கள் கத்திகளுடன் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version