பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சேலத்தில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். செல்போன் போன்ற தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Exit mobile version