பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழப்பு!!!

ஈரோடு மாவட்டத்தில், பப்ஜி கேம் விளையாடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகனான சதீஸ்குமார் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தமது நண்பர்களுடன் இணைந்து பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்ட அவர், மாட்டு சந்தையில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். சதீஸ்குமாரை அவரது பெற்றோர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஸ்குமார் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Exit mobile version