ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் கலை அறிவியல் கல்லூரி

சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் கலை அறிவியல் கல்லூரி கட்டப்படும் என நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக, நிதிநிலை அறிக்கையுடன் சட்டப்பேரவை வளாகம் வந்த, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

Exit mobile version