திருச்சியில் தனியார் அமைப்பு சார்பில் நாணயக் கண்காட்சி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்று வரும் நாணயக் கண்காட்சியில் பல்வேறு உலக நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தபால் தலைகள் இடம்பெற்றுள்ளன.

தனியார் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில் சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரையிலான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் இடம் பெற்றுள்ளன . மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் அந்நாடுகளின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவியர் மற்றும் நாணயங்களை சேகரிப்போர் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Exit mobile version