சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் 3 வது இடம் பெற்ற கோவை மாணவி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில், 3, 4 ம் இடங்களை, கோவை மற்றும் சென்னை மாணவிகள் பிடித்து அசத்தியுள்ளனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில், கோவை மாணவி காவ்யா வர்ஷினி, 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இதேபோல் சென்னையை சேர்ந்த தீப்ஷிகா என்ற மாணவி 496 மதிப்பெண்கள் பெற்று 4 வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் நியூஸ் ஜெ சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்த மாணவி காவ்யவர்ஷினி, எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவராவதே தன்னுடைய லட்சியம் என்று தெரிவித்தார். மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த மருத்துவராக விரும்பவதாகவும் காவ்யா வர்ஷினி தெரிவித்தார்.

Exit mobile version