கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியார் பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

மில்லில் உள்ள இயந்திரத்தில் வெளிப்பட்ட தீப்பொறியால், திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், பஞ்சு மூட்டைகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கடும் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், லட்சக்கணக்கான மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version