சென்னைக்கு அடுத்தபடியாக கோவை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

வேடப்பட்டி, வெள்ளானைப்பட்டி, மசக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் 70 அம்மா மினி கிளினிக்குகளை திறக்க அனுமதி அளித்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகமான மேம்பாலங்களும், சாலை விரிவாக்கத் திட்டப்பணிகளும் சிறந்த முறையில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் கே அர்ஜுனன், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version