கோவை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்

உலக மகளிர் தினமான இன்று கோவையைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் மூன்ற பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவரின் மனைவி சிந்துவுக்கு முதல் பிரசவத்திலேயே மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் மகப்பேறு கால சிகிச்சை பெற்று வந்த சிந்துவுக்கு, அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

மூன்று குழந்தைகளும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தின் போது, ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததையொட்டி, மருத்துவமனை முதல்வர் அசோகன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Exit mobile version