கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கோவை சிறுமி : அதிர்ச்சித் தகவல்

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கோவை பண்ணிமடை பகுதியில் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மாயமானார். இதனை தொடர்ந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக காவல் துறையினர் 7 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்த பாலியல் வன்கொடுமையானது ஒருவர் மட்டுமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமையாக நடைபெற்றிருப்பது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு சம்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Exit mobile version