தேங்காய் ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து

அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் மலைப்பாதையில், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில், தேங்காய் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு தேங்காய் ஏற்றி வந்த, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்தியூர் வழியாக தமிழகம் – கர்நாடகா செல்லும் வாகனங்கள் சுமார் 5 மணி நேரம் நிறுத்தப்பட்டன. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் லாரி உதவியாளர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

Exit mobile version