கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் மூடல்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான ஓடுதளங்களில் வெள்ளம் புகுந்துள்ளதால் விமான சேவை முடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் 11ஆம் தேதி மாலை வரை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version