கூட்டுறவு வங்கிகள் ஏழைகளின் வங்கியாக மாற்றம் -தமிழக அரசுக்கு பாராட்டு

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி, கூட்டுறவு வங்கிகளை ஏழைகளின் வங்கியாக மாற்றியது தமிழக அரசு என, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கூட்டுறவு துறை சார்பில் 65-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி, தலைவர்களை உருவாக்கி அதன்மூலம் ஏழைகள் பயன்படும் விதமாக, ஏழைகளுக்கான வங்கிகளாக கூட்டுறவு வங்கிகளை உருவாக்கியது தமிழக அரசு என தெரிவித்தார்.

விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

Exit mobile version