ஆஸ்கர் விருது பெற்ற ஆவண குறும்பட முருகானந்தத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஆஸ்கர் விருது பெற்ற மலிவு விலை நாப்கின் கண்டுபிடிப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவண குறும்படத்தில் நடித்த முருகானந்தத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

கோவை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவர், மலிவு விலை நாப்கீன் என்பதை வலியுறுத்தி பெண்களுக்கான ஆவண குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக கோவை விமான நிலையம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆஸ்கர் விருது பெற துண்டுகோலாக இருந்த இருந்த முருகானந்தத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

Exit mobile version