நாட்டிலேயே மின்மிகை மாநிலமாக தமிழகம் இருக்கிறது

தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே மெகா கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவங்ககை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்கு ஆதரவாக சிவகங்கை அரண்மனைவாசல் அருகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். தேர்தல் அறிக்கையில் அதிமுக அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகள் ஒருங்கிணைந்து மக்களை சந்தித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், திமுக தலைமையில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து மக்களை மீண்டும் ஏமாற்ற வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், நாட்டிலேயே மின்மிகை மாநிலமாகவும் தமிழகம் இருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version