அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற வேண்டும்:தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

தேர்தல் வெற்றியை ஈட்டுவதன் மூலம், நூறாண்டு காலம் கழகமே ஆளும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையும், தகுதிவாய்ந்த வேட்பாளர்களும், அதிமுக கூட்டணி மீது மக்களிடம் பெருகி வரும் ஏகோபித்த ஆதரவை நினைத்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அயராத உழைப்பால், வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றும் பொறுப்பு இனி கழக சிப்பாய்களுக்கே உரியதாகும் என தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியை வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும், தங்கத்தாரகை அம்மா, சந்தன பேழையில் சாய்ந்துறங்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திராவிட இயக்கத்தின் வெற்றி தேரோட்டத்திற்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா ஆகியோரின் புகழடி பொற்பாதங்களில் வெற்றியை சமர்ப்பிப்போம் என்ற உறுதியை ஒன்னரை கோடி தொண்டர்கள் எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version