சேலத்தில் 43000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர்

சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி, 43 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். பொதுமக்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அதிமுக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட மகளிர் குழுக்கள் தயாரித்த பொருட்கள் விற்பனையை அவர் தொடங்கி வைத்தார்.

Exit mobile version