மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

வரும் 17ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று வரும் 17ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை, மேட்டூர் அணையில் நீர் திறக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாணமை மேற்கொண்டு உயர் மகசூல் பெற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version