பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி வழங்க உத்தரவு!!

தமிழ்நாட்டில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நீரில் மூழ்கியும், சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயும், தீ விபத்தில் காயமடைந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முல்லை என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Exit mobile version