இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு…

இடி மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 15 ஆம் தேதி இடி மற்றும் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்ததை சுட்டிக் காட்டியுள்ளார். அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ள முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதிலிருந்து தலா 4 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version