அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இனிப்புகளை வழங்கினார். அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை ஒட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அன்னதானம் வழங்கினர்.

Exit mobile version