News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் விருது

Web Team by Web Team
July 15, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் விருது
Share on FacebookShare on Twitter

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள்” வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக பணிபுரிந்த ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை” வழங்கி கெளரவித்தார்.

சட்டம் ஒழுங்கு போலீசார், குற்ற பிரிவு போலீசார், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சென்னை மத்தியக்குற்றபிரிவு, பொருளாதார குற்றபிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை நுண்ணரிவுப்பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, விபசாரதடுப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம், சிறுவர் நல காவல் பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை, தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய காவல் பிரிவுகளில் பத்து ஆண்டுகள் துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கபடாமல் சிறப்பாக பணியாற்றிய ஆண் ,பெண் உள்ளிட்ட 642 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அவர்களில் 591 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்சியில் காவல் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன், வடக்கு கூடுதல் ஆணையர் செந்தில் குமார், போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார். மத்தியகுற்றபிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

விருதுகளை வழங்கிய பின்னர் மேடையில் பேசிய பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

10 ஆண்டு காலமாக எந்த தவறும் இழைக்காத காவலர்களுக்கு இன்று பதக்கம் வழங்கப்பட்டது, இதே போன்று அனைத்து காவலர்களும் பணிபுரிய வேண்டும் என அவர் பேசினார்.

காவல்துறையில் உயரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நிலை காவலர்களும் ஒன்றிணைந்து உழைத்தால் தான் காவல்துறைக்கு இன்னும் சிறப்பு பெயர் கிடைக்கும் என்று பேசிய அவர், மேலும் கொரோனா சூழ்நிலையில் காவலர்கள் உடல்நலம் மட்டுமில்லாமல் மன உறுதியோடு பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

95 சதவிகிதம் காவலர்களுக்கு கொரோனா தடுப்புஊசி முதல் தவணை போடப்பட்டுள்ளது எனவும் மேலும், சென்னை மாநகரின் அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, தமிழகத்தை பொறுத்துவரையில் இதே போன்று பத்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் கிடைக்கப் பெறவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் தகுதி இருந்தும் பதக்கம் பெறாத காவலர்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றால் இந்தப் பதக்கமும், இதனால் கிடைக்கக்கூடிய சலுகையும் கிடைக்காது எனவும் பதக்கம் பெறாத சில காவலர்கள் வருத்தம் தெரிவித்தனர். உடனடியாக தமிழக முதல்வர் இதனை கருத்தில் கொண்டு தகுதி உள்ள நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருது வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags: Chennai Commissionercm awardscommissioner of policetn police
Previous Post

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் நாளை திறக்கப்படாது என அறிவிப்பு

Next Post

சாகும்வரை சிறை: சிறுமியை வன்கொடுமை செய்த போலிச்சாமியாருக்கு அதிரடி தீர்ப்பு

Related Posts

இன்ஸ்டாகிராமில் பழகி 40 லட்சம் மோசடி !
தமிழ்நாடு

இன்ஸ்டாகிராமில் பழகி 40 லட்சம் மோசடி !

February 13, 2023
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !
தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வெட்டி கொலை !

February 6, 2023
ஆண்கள் வாழ்வில் விளையாடிய தேவி !
தமிழ்நாடு

ஆண்கள் வாழ்வில் விளையாடிய தேவி !

February 4, 2023
மாயமான கைக்குழந்தை 8 வயது சிறுவனாக மீட்பு !
தமிழ்நாடு

மாயமான கைக்குழந்தை 8 வயது சிறுவனாக மீட்பு !

February 4, 2023
அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”
தமிழ்நாடு

அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”

February 4, 2023
தடம் மாறுகிறார்களா கல்லூரி மாணவர்கள்!
தமிழ்நாடு

தடம் மாறுகிறார்களா கல்லூரி மாணவர்கள்!

February 3, 2023
Next Post
சாகும்வரை சிறை: சிறுமியை வன்கொடுமை செய்த போலிச்சாமியாருக்கு அதிரடி தீர்ப்பு

சாகும்வரை சிறை: சிறுமியை வன்கொடுமை செய்த போலிச்சாமியாருக்கு அதிரடி தீர்ப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version