எதிர்க்கட்சிகளை முதலமைச்சர், அமைச்சர்கள் அரவணைத்து செல்கின்றனர் – மலேசியா பாண்டியன்

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை முதலமைச்சரும் அமைச்சர்களும் அரவணைத்துச் செல்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மலேசியா பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டிகளை வழங்கினர்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மலேசியா பாண்டியன், சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும் எதிர்கட்சிகளை அரவணைத்து செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தற்போதுதான் பார்ப்பதாக அ.தி.மு.க. அரசுக்கு புகழாரம் சூட்டினார். சிறப்பாக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Exit mobile version