மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் முதல்வர்,துணை முதல்வர் மரியாதை

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் தேர்தல் வெற்றி சான்றிதழை மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும், அதிமுக எம்.எல்.ஏ.க்களும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Exit mobile version