இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகள் காலியாக உள்ளன. விரைவில் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து 20 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில், நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து விரிவாக அலசப்பட்டது.

Exit mobile version