ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது

ஜாக்டோ – ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் வராததால் மூடப்பட்ட பள்ளிகளை கட்டாயம் திறக்க வேண்டும் என்றும், சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளிகளை திறந்து வைத்து, பள்ளி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version