பரத நாட்டிய கலையை ஊக்குவிக்க வேண்டும்: பரத கலைஞர்கள் கோரிக்கை

பரத நாட்டிய கலையை அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பரத கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரத நாட்டியம் என்பது கலை மட்டுமல்ல சிறந்த உடற்பயிற்சி என்று கன்னியாகுமரி மாவட்ட பரத நாட்டிய கலைஞர் சிந்து சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் யோகா, விளையாட்டு என பலவற்றை ஊக்குவிப்பது போன்று, பரதநாட்டியத்தையும் அறிமுகப்படுத்தி அவற்றையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version