மதுரை அருகே கிராம கூட்டத்தில் இருபிரிவினருக்குமிடையே பயங்கர மோதல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கிராம கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்தும், இருவருக்கு தலையில் பலத்தகாயமும் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கிடாரிபட்டி கிராம கூட்டத்தில் பணம் வரவு செலவு தொடர்பாக இருபிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பானதில், தமிழ்வாணன் என்பவர் பரதன் என்பவரை கத்தியால் குத்தினார். மேலும் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி, மகாதேவன் ஆகியோரின் தலையில் பலத்த காயமேற்பட்டு ரத்தம் பாய்ந்தது. உடனடியாக பொதுமக்கள் அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த பரதன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்வாணன் அணியினர் மீது மேலவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version