கரூர்,நெடுங்கூருக்கு வந்த செந்தில் பாலாஜியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எஏ செந்தில் பாலாஜி நெடுங்கூர் பகுதிக்கு சென்ற போது, பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெடுங்கூர் பகுதியில் உள்ள குளத்தினை தூர்வார அரசு சார்பில் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், திமுக சார்பில் குளத்தை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் ஏற்கனவே, குளத்தை தூர்வாரிய நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, அன்பில் பொய்யாமொழி உள்ளிட்டோர் நெடுங்கூர் பகுதிக்கு வந்தனர். அப்போது மக்கள் அவர்களை முற்றுகையிட்டு தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகள் எங்கே என்று கேட்டதோடு, பதாதைகளை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பொதுமக்களின் ஆவேசத்தை கண்டு அஞ்சிய செந்தில்பாலாஜி, உடனடியாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Exit mobile version