சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயரைச்சூட்டி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய பெயர் பலகை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சென்ட்ரலில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் பயன்படுத்தும் பயண டிக்கெட்டுகளில் எம்.ஜி.ஆர். பெயர் அச்சிடப்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version