மாநகர பேருந்தில் பட்டாக் கத்திகள்: 4 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை பாரிமுனையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பட்டாக் கத்திகள் இருந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை பாரிமுனையில் இருந்து மாநகர பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து புழல் சிக்னல் அருகே வந்த போது பேருந்தில் இருந்த மாணவர்கள் கலாட்டா செய்து வந்தனர். இதனை கண்ட புழல் காவல் ஆய்வாளர் நடராஜன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அந்த மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர். இதனையடுத்து அந்த மாணவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகே 2 பட்டாக்கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பேருந்தில் இருந்து தப்பியோடிய கல்லூரி மாணவர்கள் 4 பேரை கைது செய்தனர். இருவர் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

Exit mobile version