தமிழகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள்

விவசாயி என்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் துன்பங்களை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திலுள்ள இருகூர் மற்றும் நீலாம்பூர் வழங்கு வாய்க்காலில் உள்ள மதகுகளை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, ஆசான் குளம் தூர் வாரப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் அளித்ததாகவும், தற்போது அதன்படியே சீரமைப்பு பணி நடந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். தமிழகம் முழுவதும் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 829 நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Exit mobile version