குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சற்று ஓய்ந்து இருந்தது. இந்நிலையில், இன்று டெல்லி ஜும்மா மசூதி, சீலம்பூர், ஜோர் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜும்மா மசூதிக்கு தொழுகை நடத்த வந்த இஸ்லாமியர்கள் மசூதிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி சீலம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. போராட்டம் நடைபெறும் இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version