குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப்பெற மாட்டாது -மத்திய அமைச்சர்

குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப்பெற மாட்டாது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தில் இனி எந்த ஒரு மாற்றமும் செய்யப்போவதில்லை என்றும் திரும்பப்பெற போவதும் இல்லை என்றும் கூறினார். இந்த சட்டம் பற்றி புரிந்து கொள்ளாமல் ஒரு சில எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்த அவர், இந்திய இஸ்லாமியர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி அளித்தார்.

Exit mobile version